News Just In

1/18/2024 03:05:00 PM

கோட்டாபயவின் கழுத்தில் மலர்வளையமே வைக்க வேண்டும்: விமல் வீரவங்ச




ரணில் டயஸ்போராக்களின் சிறந்த நண்பராக இருப்பதால் யுத்தத்தின் பின்னர் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போன விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள டயஸ்போரா முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட பொதுஜன பெரமுனவினர் காட்டிக்கொடுப்பு சட்டமூலத்துக்கு கையுயர்த்தினால் கோட்டாபயவின் கழுத்தில் மலர்வளையமே வைக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (17.01.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments: