மாணவர்களுக்கு பொலித்தீனை உண்ணக் கொடுத்த அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் சிலரை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு அதிபர் வற்புறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், உடன் நடைமுறைககு வரும் வகையில், கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு ஏற்ற வகையில் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
No comments: