News Just In

11/12/2023 04:40:00 PM

உச்சகட்ட பதற்ற நிலையில் யுத்தகளம்.....! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்





இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில், காசாவின் நடைபெற்றும் போருக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதி தொடர்ந்து தெரிவிக்கையில், காசாவில் இடம்பெற்றுவரும் போருக்கு நடடிக்கை எடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இஸ்ரேல் மீது இஸ்லாமிய நாடுகள் எண்ணெய் மற்றும் பொருட்கள் மீதான தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல் நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் காசாவில் இடம்பெற்று வரும் போருக்கு நடடிக்கை எடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான "போர் குற்றங்களுக்கு" இஸ்ரேல் பொறுப்பு என்றும் காசாவில் போரை உடனடியாக நிறுத்த வே

No comments: