News Just In

11/22/2023 02:33:00 PM

முன்பள்ளிகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!




நான்கு வயதினை பூர்த்தி செய்த பிள்ளைகளைக் கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (22) நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த கல்வி அமைச்சர், இது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்படி, 10 ஆம் ஆண்டில் பொதுத் தரப் பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், 17 வயதில் ஒரு மாணவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments: