News Just In

11/28/2023 04:23:00 PM

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் இதுவரை மீட்பு!




கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27) முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினத்துடன் சேர்த்து 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரிகனகசபாபதிவாசுதேவதெரிவித்துள்ளார்.இதுவரை37எலும்புகூட்டுதொகுதிகள்முழுமையாகஅகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது.

இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரியவித்துள்ளார்.


No comments: