News Just In

10/17/2023 10:00:00 AM

தமிழ் மக்களுக்கான தீர்வு அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி அக்கறையுடன் உள்ளார் அமைச்சர் சுசில்!





“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கறையுடன் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி தெரிவித்த அவர்:

ஜனாதிபதி மீதும், அரசு மீதும் “தமிழ் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர் . தீர்வுகளைக் காண்பதற்கு அரசுடன் இணைந்து செயற்பட இவர்கள் பின்னடித்தே வருகின்றனர். பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை முன்வைத்தால், அரசுக்கு ஆதரவு வழங்குவோம் என்று தமிழ் அரசியல்வாதிகள் நிபந்தனையை முன்வைக்கின்றனர். தீர்வுகள் கிடைத்த பின் ஆதரவு எதற்கு? ஆதரவை வழங்கி அரசுடன் இணைந்து பயணித்தால்தானே தீர்வுகளை வென்றெடுக்க முடியும். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றார்.

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும். இந்த நம்பிக்கை எனக்குண்டு. வாயால் சொல்வதை விட, செயலில் நடப்பது கடினம்தான்.

எனினும், இந்த விவகாரத்தில் ஜனாதிபதியும் அரச தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்தால் அது மேலும் பலமாக இருக்கும்; தீர்வுகளை நாம் விரைந்து வென்றெடுக்க முடியும்.” எனசும் அவர் தெரிவித்துள்ளார்

No comments: