News Just In

9/14/2023 06:44:00 PM

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்! -கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுரை

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்! -கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுரை
அபு அலா -



திருகோணமலையில் மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து நேற்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து அவர்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார்.

இன்று (13) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மீனவ சங்கத்தினர், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள், அதிரடிப் படையினர் ஆகியோருடன் குறித்த பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த பிரச்சனை தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுபவருக்கு எதிராக மீன்பிடி திணைக்களம், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள், அதிரடி படையினர் ஆகியோரை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவர் அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆளுநர் கருத்து வெளியிட்டார்.


No comments: