News Just In

9/26/2023 02:49:00 PM

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை! பேராயர் மல்கம் ரஞ்சித்

அரசியல் செல்வாக்கில்லாத பக்கச்சார்பற்ற விசாரணை
ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை




அரசியல் செல்வாக்கில்லாமல் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படு மானால், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசா ரணை நடத்துவது அவசியமற்றுவிடுமென, பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டபோதே, அவர் இதனை கூறியுள்ளார்.

எம்பிலிப்பிட்டி புனித மிக்கேல் தேவாலயத்தில் பொன்விழா கொண்டாட்டம் அருட்தந்தை தலைமையில் இடம்பெற்றது. அங்கு பேசிய பேராயர் மெல்கம்ரஞ்சித்;-

ஈஸ்டர் தாக்குதலை பக்கச்சார்பின்றி நடத்தினால் சர்வதேச விசாரணை அவசியமில்லை. தலைவர்கள் விசாரணைக்கு தலைமை தாங்கி, நேர்மையாக செயல்பட்டால் உண்மையைக் கண்டறியலாம்.

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், எவரையும் பாதுகாக்காமல், இந்த விசாரணை நடைபெறுவது அவசியம்.

உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டால், எங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை. இவற்றையெல்லாம் வெளிப்படையான முறைகள் மூலம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.






No comments: