News Just In

9/13/2023 10:48:00 AM

அசாத் மௌலானா மீதுசாய்ந்தமருது பகுதி பெண்ணொருவர் வழக்கு தாக்கல் !



ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் தகவலாளரான அசாத் மௌலானாவுக்கு எதிராக பெண் ஒருவரால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் அவர் தம்மை திருமணம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்து குறித்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன் முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments: