News Just In

9/01/2023 08:03:00 AM

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

குறித்த கண்காட்சி யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் நாளை (01-09-2023) காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்துள்ளார்.

No comments: