News Just In

9/21/2023 04:16:00 PM

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவருடன் சாணக்கியன் சந்திப்பு!


பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவருடன் சாணக்கியன்   சந்திப்பு!




பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவர் கமிலா சுக்டன் Camilla Sugden (Deputy Head, India and India Ocean Directorate) அவர்களை த னது பிறந்த தினமான நேற்றைய தினம் சந்தித்திருந்தார்  

அதன்போது எமது வட கிழக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் மற்றும் கொடுத்துவரும் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடி இருந்தார் . மே மாதத்துக்கு பின்னரான இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் இல்லாதவிடத்து தற்பொழுது ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் அதனடிப்படையில் இவரை சந்திக்கும் வாய்ப்பு சாணக்கியனு க்கு  கிடைத்தது. 

அவரை சந்தித்த  நேரம்  தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்வலத்தின் போது தாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அன்றைய தினம் நடந்து கொண்டிருந்தது அது சம்பந்தமாகவும் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் மற்றும் இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் அரசு நடந்து கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 மேலும்  மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு பற்றியும் திருகோணமலை மற்றும் பல பிரதேசங்களில் இடம்பெறும் அத்துமீறிய விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் பற்றியும் இதன் போது  கலந்துரையாடப்பட்டது.

No comments: