News Just In

8/24/2023 12:02:00 PM

உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் இளைஞன்!





தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்தியாவுக்காக செஸ் உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளார்.

உலக செஸ் இரசிகர்கள் மத்தியில் மேக்னஸ் கார்ல்சன் என்றாலே ஒருவித புத்துணர்ச்சி பெருகிவிடும். பிரக்ஞானந்தா, அத்தகைய முதன்மை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு முதல் இரண்டு சுற்றுகளையும் டிராவில் முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது டை-பிரேக்கர் சுற்றில் வெற்றி வாகை சூடி கோப்பையைக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது. இது இந்திய செஸ் இரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இறுதி சுற்றின் மூன்றாவது போட்டி இன்று(24.08.2023) அஜர்பைஜானில் நடைபெறவுள்ளது.


No comments: