கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியை தனது பயணப் பையில் மறைத்து வைத்து குவைத் செல்ல முயன்ற அந்நாட்டு பிரஜை ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL229 விமானத்தில் குவைட் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்ததில் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரைபிள் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபரும் துப்பாக்கியும் விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கண்டியில் அமைந்துள்ள கடையொன்றில் இருந்து இந்த துப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் எந்த நோக்கத்திற்காக இதனை தனது நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்றார் என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: