News Just In

6/18/2023 08:40:00 PM

மட்டு. வாழைச்சேனையில் போர் கோழி சேவல் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் கைது!




மட்டக்களப்பு வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடைம் இருந்து 6 சண்டை சேவல்கள் மற்றும் பணம் என்பவற்றை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

No comments: