யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர். N. சபாரெட்ணம் அவர்களின் புதல்வரும் பிரபல வைத்திய நிபுணருமான சபாரெட்ணம் சிவகுமாரன் அவர்கள் தனது 77வது வயதில் 14.05.2023 அன்று சிவபதம் அடைந்தார்.
யாழ் இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்குள் உட்பட்ட காலப்பகுதியில் வைத்தியசாலையில் தங்கியிருந்து மக்களுக்கு அளப்பெரிய சேவைகள் செய்த மாமனிதர். யாழ் மருத்துவ பீட மாணவர்களால் "கடவுள்" என அழைக்கப்பட்ட பெருமகனார் இவர்.
தியாகி திலீபனின் உயிர் உடலை விட்டு பிரிந்துவிட்டது என்று உறுதிப்படுத்தியதுடன் திலீபனின் உடலுக்கு மேடையில் விழுந்து முதல் மரியாதை செலுத்தியவரும் இவரே.
அன்னாரின் பூதவுடல் இன்று செய்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கனத்தை பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: