News Just In

4/27/2023 10:42:00 AM

நிந்தவூர் தேசிய மட்டத்தில் சாதனை!





( நூருள் ஹுதா உமர் )
கடந்த வருடம் (2022) சமூக பாதுகாப்புச்சபை ஓய்வூதிய திட்டத்தில் தேசிய மட்டத்தில் அதிகளவான பயனாளிகளை இணைத்து கொண்டமைக்காக நிந்தவூர் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

நிந்தவூர் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டமையால் அதன் செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். லத்தீப் அவர்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு இம்மாதம் 25 ம் திகதி நடைபெற்றது

நிந்தவூர் மண்ணுக்கு பெருமையை தேடி செயலகத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் நற்பெயர் கிடைக்க மக்களுக்காக கடமையாற்றிய முன்னாள் மேலதிக அரசாங்க அதிபரும், பிரதேச செயலாளருமான சட்டத்தரணி ஏ.எம். லத்தீப் அவர்கள் நிந்தவூர் மக்கள் என்றும் மறக்க முடியாத ஒரு செயலாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: