News Just In

4/06/2023 04:26:00 PM

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் சகவாழ்வும், நல்லிணக்கமும் தொடர்பிலான திட்டமிடல் கூட்டம் !




நூருல் ஹுதா உமர்

இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு நிறுவனமான "இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் திட்டமிடல் கூட்டம் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலாவின் ஒருங்கமைப்பில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எம்.எஸ். அன்ஸார் மௌலானா தலைமையில் மருதமுனை பெண்கள் நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

அமைப்பின் செயலாளர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யாவினால் சென்ற மாதக்கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது டன் வேலைத்திட்டங்கள் தொடர்பாக உப தலைவரும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளருமான எஸ்.எல்.ஏ.அஸீஸ், வெளியீடுகளுக்கான செயலாளரும், ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தர் ஆர். அனுஷ்கா, ஒருங்கிணைப்பு குழு செயலாளரும், ஆசிரியருமான எம்.எம். விஜிலி மூஸா உட்பட பலரும் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தனர்.

அரசியல்சார் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி "சமூக தோட்டம்" செய்தல் தொடர்பான தீர்மானங்களும் எடுக்கப்பட்டதுடன் சர்வதேச மகளீர் தின நிகழ்வும் இப்தார் வைபவமும் நடத்துதல் தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


No comments: