News Just In

4/16/2023 06:26:00 PM

மாட்டு வண்டியுடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் பலி!

அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (15.04.2023) வயல் வேலைக்காக சென்று கொண்டிருந்தவர்கள் பயணித்த இரு மாட்டு வண்டிகளுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்துள்ளதுடன் மற்றுமொரு வண்டியில் மாட்டினது கால்கள் பிணைந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சாய்ந்தமருது 12ஐச் சேர்ந்த 42 வயதுடைய ஜமால்தீன் ஹாறூன் என்பவராவார்.

இதன் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இன்று காலை விபத்து நடைபெற்ற நிந்தவூர் மாட்டுப்பள்ளை பிரதான வீதியில் தொடர்ச்சியான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: