News Just In

3/05/2023 11:34:00 AM

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், இன்றையதினம் இலங்கையில் எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது வரை காணப்படும் எரிவாயுவின் விலை அவ்வாறே தொடரும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள போதிலும் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: