இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையோடு “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளிலமைந்த மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு திங்களன்று 13.03.2023 காலை 9 மணி தொடக்கம் வெருகல் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் இரத்தம் தேவையுள்ளோருக்கு வழங்கி உயிரைக் காப்பதற்காக திருகோணமலை இரத்த வங்கிக்குச் சேர்க்கப்படும் என்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திலீப்குமார் மேலும் தெரிவித்தார்.
ஆர்வமுள்ள குருதிக் கொடையாளிகள் முன்வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யலாம் என்று பொதுவில் அழைப்பு விடுக்கப்படுகின்றது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: