News Just In

3/10/2023 10:44:00 AM

டொலர்களை பதுக்கியவர்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம்!




மோசடியாளர்களின் கதைகளை நம்பி டொலர்களை பதுக்கி வைத்திருந்த மக்கள் இன்று சிரமத்திற்கு உட்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டுக்கு டொலர்களை அனுப்பக் கூடாது என்று சொல்லி கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள்தான் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தன.

வெளிநாடுகளில் பணிபுரிவதாக நம்பப்படும் சிலர் டொலர்களை நாட்டுக்கு அனுப்பாமல் மறைத்து வந்ததாகவும் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ரூபாவின் பெறுமதி மிகவும் வலுவடைந்து வருகிறது. நாட்டிற்கு 400 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ரூபாவின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்தவுடன் வெளிநாடுகளில் பணிபுரியும் சிலர் மறைத்து வைத்திருந்த டொலர்களை திருப்பி அனுப்ப ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: