தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த நான்கு பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கை நேற்றய தினம் (03.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெலிபன்ன மற்றும் குருந்துகஹா ஆகிய இடங்களில் வைத்தே 4 பேருந்துக்கள் கைப்பற்றப்பட்டதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த 4 பேருந்துக்களும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்வதாக கூறி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: