சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்த 14 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி விற்பனை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் பெண்னை கைதுசெய்துள்ளனர்.
அதேசமயம் சந்தேக நபரான பணிப்பெண் தவிர, அவருக்கு உதவியதாக கூறப்படும் மற்றுமொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் 75 வயதான ஓய்வுபெற்ற பொறியியலாளர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: