News Just In

2/24/2023 06:02:00 PM

சிறந்த பெறுபேற்றுக்கான கெளரவிப்பு!

கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் HECS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை (2022) வழிகாட்டல் வகுப்பில் கலந்து சித்திபெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 25.02.2023 மு.ப 10.30 மணிக்கு கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராசா மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற 24 மாணவர்கள் கெளரவிக்கப்படவுள்ளார்கள். இக்கெளரவிப்பினை EDS பழைய மாணவர்கள் நடாத்துகின்றனர். கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் நா.ஜோதிராஜா அவர்களின் தலைமையில் நடைபெறும் நிகழ்வுக்கு கல்வி அபிவிருத்திச் சங்க வகுப்பில் கல்வி கற்ற முன்னாள் மாணவிகளான வைத்திய கலாநிதி. திருமதி. பாத்லெட் மைதிலி (உதவி பணிப்பாளர், போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) பிரதம அதிதியாகவும், வைத்திய கலாநிதி. திருமதி. சுகுமார் பிரமிளா (போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

No comments: