எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை காரணமாக கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான, அணிவகுப்புக்கான ஒத்திகைகள் இன்று சனிக்கிழமை (28) முதல் தினமும் காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை குறித்த வீதிகளில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பின்வரும் வீதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: