News Just In

11/30/2022 01:07:00 PM

பெற்றோர்கள் தொழில்வாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு செல்வதனால் பிள்ளைகள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகுகிறார்கள்




நூருல் ஹுதா உமர்

மாணவர்களின் பெற்றோர்கள் பிரதான தொழிலான றப்பர் தொழிலை பிரதான தொழிலாகவும் ஏனையோர் தனது குடும்ப கஸ்டத்தினால் வேலைகளுக்காக பிள்ளைகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் அதனால் மாணவர்கள் தங்களது குடும்பங்களை சுமக்கவேண்டி ஏற்படுகின்றது இதனால் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலகின்றனர் என இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர் லோ.கஜரூபன் தெரிவித்தார்.

இணைந்த கரங்கள் அமைப்பினால் மொ/ஸ்ரீ/வாணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணி வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் மாரிமுத்து சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது கல்வியினை இடை விலகாமல் அவர்களை பாடசாலைக்கு தினமும் சென்று கல்வியை கற்க வேண்டும் என்ற நோக்கத்தையும் வலியையும் உணர்ந்து "ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் மகுட வாசகத்தினை மாணவர்களுக்கிடை யில் விதைத்து வைக்கின்றனர். இப்பாடசாலையில் சாதாரண தரத்திற்கு போதிய விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது என்றார்.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலையின் ஆசிரியைகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான எஸ்.காந்தன், துலக்சன், நா. சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments: