News Just In

11/12/2022 12:11:00 PM

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

மேல்மாகாண கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் தற்காலிக நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த பிரதேசங்களில் நாளை (13) காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.00 வரையான காலப்பகுதியில் நீர்விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

நீர் வழங்கல் குழாய்களில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்விநியோகம் தடைப்படும் என தெரிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொட தோட்டம், ஜா-எல, கட்டுநாயக்க - சீதுவை நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகளுக்கும் கம்பஹா பிரதேச சபை பகுதிக்கும் குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: