News Just In

11/10/2022 05:50:00 PM

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!





அம்பாறை – ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (32) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

அதிகாலை வேளையில் காட்டுயானையினால் வீடு உடைக்கப்படும்போது, தமது பிள்ளைகளை காப்பாற்ற முயற்சித்த வேளை யானை தாக்குதலுக்குள்ளாகி அவர் மரணமடைந்துள்ளாதாக விசாரணையில் தெரியவந்தள்ளது.

அத்துடன், காட்டு யானையின் தாக்குதலில் கண்ணகி கிராமம் பகுதியில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments: