News Just In

10/06/2022 07:45:00 AM

பாடசாலை ஒன்றின் வளவுக்குள் பெண்ணொருவர் அதிரடிப்படையினரால் கைது!

காலி - ஹிக்கடுவையில உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் வளவுக்குள் பெண்ணொருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வளவுக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 8.229 கிராம் ஹெரோயினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஹிக்கடுவை களுபே பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளம் பெண்ணே போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments: