News Just In

10/06/2022 10:23:00 AM

விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு!!





(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று (05) திகதி ஏடு தொடக்கும் வித்தியாரம்ப நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
ஏ டு தொடக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி தட்சயானந்தா ஜீ மஹராச் தலைமையில் இடம்பெற்ற விஜயதசமி நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர் சுவாமி நீலமானந்தா ஜீ மஹராச் அவர்களும் பங்குபற்றி சிறுவர்களுக்கு ஏடு தொடக்கியிருந்தார்.


No comments: