News Just In

9/10/2022 10:45:00 AM

ரணவல பகுதியில் இடம் பெற்ற கோர விபத்து!

கேகாலை ரணவல பகுதியில் இன்று (10) இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: