News Just In

9/15/2022 06:09:00 AM

வாழைச்சேனை அந்நூரில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை இளைஞர் கழக சம்மேளம், கோறளை மத்தி பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆண்கள், பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இதில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி ஜே.கலாராணி, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தி அருள்மொழி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் அப்துல் ஹமீட், கிராம உத்தியோகத்தர்களான இஸட்.எம்.றிகாஸ், எஸ்எம்.சஜ்மி, ஆர்.எம். றம்ளான், ஏ.எம்.அன்வர் சதாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய அத்தனை உறவுகளுக்கும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் பஸீல் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: