News Just In

9/18/2022 05:46:00 AM

திடீரென இடிந்து வீழ்ந்த தங்கச் சுரங்கம் - 20 பேர் தொடர்பில் கடும் அச்சம்!

தங்கம் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது. அதுவும் தங்கச் சுரங்கம் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்படி ஒரு தங்கச் சுரங்கத்தை தோண்ட முற்பட்ட 20 பேரின் நிலை தொடர்பில் தெரியாது கதறுகின்றனர் குடும்பத்தினர்.

இப்படி ஒரு சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. ஆம் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்த 20 பேர் தொடர்பில் தகவல் எதுவும் தெரியவரவில்லை. எனினும் அவர்களை மீட்கும் பணி தீவிரம் பெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் தங்கச்சுரங்கங்கள் உள்ளன. இதில் சில சுரங்கங்களில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் மேற்கு கலிமந்தன் மாகாணம் பென்ங்கயங் மாவட்டம் கினண்டி கிராமத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு 20 பேர் தங்கம் வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், சுரங்கத்தில் இருந்த 20 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் தொடர்பு குறைவான பகுதி என்பதால் இந்த விபத்து குறித்து அதிகாரிகளுக்கு நேற்று இரவு தெரியவந்துள்ளது.






இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் மண்ணுக்குள் புதைந்த 20 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

No comments: