News Just In

8/11/2022 06:24:00 PM

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை ஸ்ரீ வடபத்திரகாளி ஆலய வருடாந்த திருச்சடங்கு தீமிதிப்பு!

ஏறாவூர் 04 காட்டுமாஞ்சோலை ஸ்ரீ வடபத்திரகாளி ஆலய வருடாந்த திருச்சடங்கு கடந்த 31.07.2022 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வியாழக்கிழமை 11.08.2022 தீ மிதிப்பு வைபவத்துடன் பெரு விழா நிறைவடைந்தது.

11 நாள்கள் கொண்ட இந்த திருச்சடங்கு விழாவுக்கு பல பிரதேசங்களிலுமிருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டு நிகழ்வகளைச் சிறப்பித்திருந்தனர்.

ஈழத்து வரலாற்றில் தீ மிதிப்பு என்னும் நிகழ்வு இந்த வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில்தான் முதன் முதல் ஆரம்பமாகியது என்று கூறப்படுகின்றது.

.எச்.ஹுஸைன் 

No comments: