News Just In

8/31/2022 06:20:00 AM

பெற்றோல் விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

நாட்டில் விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த நான்கு நாட்களில் பாரியளவில் எரிபொருள் பங்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசலையும் 3000 மெற்றிக் தொன் பெற்றோலையும் தொடர்ந்து விநியோகிக்கும் என்றார்.

இதேவேளை, 35,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் இன்றையதினம் இரவு, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments: