News Just In

8/14/2022 11:42:00 AM

எரிபொருள் விநியோகத்தில் இன்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்படும் புதிய மாற்றம்






தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்(QR) முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும்.
குறைந்த வரிசைகள்

இம்மாதம் முதலாம் திகதி முதல் QR முறைப்படி எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட வரிசை குறைந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: