News Just In

6/17/2022 06:22:00 AM

இலங்கையின் வடக்கு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) அவர்களின் தொடர் முயற்சியால் இந்தியாவின் தமிழகத்தில் உள்ல நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறைக்கு கப்பல் சேவையும், மற்றும் சென்னையிலிருந்து யாழ்.பலாலி விமான சேவையினை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (16-06-2022) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வெற்றியானது வடக்கு மக்களுக்கு பொருட்களை தற்போது இருக்கும் விலையிலும் பார்க்க, குறைவான விலையில் பெற்று கொள்வதோடு, துரிதமாகவும் பெற்று கொள்ளலாம்.

இந்தியா விமான சேவைகளை பெற யாழில் இருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

காலத்தின் தேவையை அறிந்து, சேவையை மேற்கொண்ட கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வே.கேசவன் என்பவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

No comments: