மன்னார், வவுனியா, கம்பஹா, தென் மாகாணம், கேகாலை, மாவனல்லை, பொலனறுவை, பதுளை, புத்தளம் ஆகிய இடங்களில் தனியார் பேருந்துகளின் சேவைகள் முற்றாக தடைப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், அந்த பகுதிகளில் 10 – 15 வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.
“நான் பெயரிட்டுள்ள பகுதிகள் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் டீசல் வழங்கப்படாத பிரதேசங்களாகும்.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், எரிசக்தி துறை அமைச்சரும் முழுப்பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அமைச்சர் ஒருவித மௌனத்தில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.
No comments: