News Just In

6/23/2022 06:10:00 AM

எரிபொருள் வரிசையில் மோதல் - நால்வர் படுகாயம்

கல்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கல்பிட்டி மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

எரிபொருள் வரிசை சம்பவத்தால் மோதல் ஏற்பட்டது. தலையில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கல்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கல்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: