கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மீமுரே – லுல்வத்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் தெல்தெனிய வைத்தியசாலைக்கும், மேலும் சிலர் மெதமஹநுவர பிரதேச வைத்தியசாலைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெதமஹநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments: