News Just In

6/25/2022 04:56:00 PM

கண்டியில் கோர விபத்து!! ஒருவர் பலி - ஆபத்தான நிலையில் பலர்!

கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மீமுரே – லுல்வத்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் தெல்தெனிய வைத்தியசாலைக்கும், மேலும் சிலர் மெதமஹநுவர பிரதேச வைத்தியசாலைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெதமஹநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments: