News Just In

5/30/2022 07:01:00 PM

மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் கடலில் விழுந்து மரணம்!

மீன்பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளதாக அவருடன் சென்ற இரண்டு மீனவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை இயந்திரப் படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மூவரில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை ஹிஸ்புல்லாஹ் குறுக்கு வீதியில் வசித்து வந்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான எம்.சஹாப்தீன் என்பவரே படகிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு கடல் பகுதியில் வைத்து தவறி விழுந்த நபரை கடற்படையினரும் மீனவர்களும் தேடி வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: