News Just In

4/29/2022 09:16:00 PM

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

இன்னும் சில நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,500 மெற்றிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய மேலும் ஒரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

இதனால், எதிர்வரும் வாரங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் பெருந்தொகையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் நகர பகுதிகளிலே இருக்கின்றனர்.

இதன்காரணமாக நகர பகுதிகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

No comments: