பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு அல்லது அவரை பதவி நீக்கப் போவதாக அறிவித்தல் விடுக்கப்படவில்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(28) இரவு நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலோ நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் அதற்கு அனைவரினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமென கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பலரிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் கூட்டம் சூடுபிடித்ததாகவும் தெரியவருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
No comments: