News Just In

4/07/2022 06:25:00 PM

.ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்த ஜனாதிபதி யார் ?



ஜனாதிபதி விரும்பினால் அவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் பதவி விலக முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அத்துடன் தாம் நினைத்தால் பதவி விலகும் ஏற்பாடு ஜனாதிபதிக்கு உள்ளதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை அவர் செய்யலாம்.

அதேசமயம் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும்வரை, பிரதமர் ஜனாதிபதியாக செயற்படலாம் என கூறிய அவர், மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்துவிட்டார்.

எனவே, சிக்கல் நிலை ஏற்பட்டால் அடுத்த வாய்ப்பு சபாநாயகருக்கு உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

No comments: