News Just In

4/05/2022 07:59:00 PM

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வாசஸ்தலத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்!

கொழும்பு - பொரளை விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வாசஸ்தலத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதனால் குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: