News Just In

4/29/2022 06:25:00 AM

வவுனியாவில் ஆர்ப்பாட்டக்களத்தில் சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையை தாங்கியவாறு வெளியான புகைப்படம்!

வவுனியாவில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையை தாங்கியவாறு ஆர்ப்பாட்டப் பேரணியில் சிலர் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவந்த நிலையில் நேற்றைய தினம் (28-04-2022) சீனா மொழியையும் தாங்கி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.

இலங்கையில் நாடாளாவிய ரீதியாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டம் வவுனியாவிலும் முழு அளவில் இடம்பெற்று வருவதுடன் ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கம் நேற்றைய தினம் (28-04-2022) போராட்டம் மற்றும் பேரணிகளையும் முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

No comments: