News Just In

3/07/2022 10:50:00 AM

பதவி உயர்வு பெற்றுச் செல்லும் செயலாளருக்கு கௌரவமும் பாராட்டும்!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உதவிப் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக்கிற்கு கௌரவமும் பாராட்டும் அளித்து வாழ்த்தி வழியனுப்பும் வைபவம் ஏறாவூர் வாவிக்கரையோ கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 06.03.2022 இரவு இடம்;பெற்றது.

ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.ஏ. ஜவாகீர், ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் உட்பட ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட இன்னும் பலர் வைபத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பதவி உயர்வு பெற்று இடமாற்றலாகிச் செல்லும் செயலாளரின் சேவைகளையும் அவரது திறமைகளையும் அதிதிகள் பலர் பாராட்டிப் பேசினர்.

இதன்போது இலங்கை நிருவாக சேவை அதிகாரியான ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியா~ஹுல் ஹக் வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு அவருக்கு நினைவுப் படிகங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.






No comments: