News Just In

3/07/2022 01:29:00 PM

ஆளும்கட்சி உறுப்பினரின் தலைமையில் சஜித் அலுவலகம் மீது முட்டைவீச்சு!



ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது என்பதை கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது.பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் குறித்த போராட்டம் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் மீது முட்டைகள் வீசப்பட்டதோடு வாகனங்கள் மற்றும் கைகளில் சில பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பதற்றமான சூழ்நிலையை அடுத்து, மதுர விதானகே தலைமையில் குழு அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.








No comments: