News Just In

1/05/2022 06:22:00 AM

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியமை எந்த வகையில் நியாயமானது : வேலுசாமி இராதாகிருஸ்ணன்

மக்களுக்கு ஆதரவாக, ஜனநாயக ரீதியில் கருத்துக்களைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியமை எந்த வகையில் நியாயமானது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைநோக்கு கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த இன்று நீக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

இந்த நிலையில், மலையக மக்கள் முன்னணியின் புஸ்ஸல்லாவ பிரதேச தோட்டத் தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

No comments: