News Just In

1/06/2022 12:03:00 PM

யால காட்டுக்குள் இரவில் யாகம் நடத்திய ராஜாங்க அமைச்சர்!


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இளம் ராஜாங்க அமைச்சர் ஒருவர் யால வன விலங்கு பூங்காவில் ஒரு பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி இரவு யாகம் ஒன்றை நடத்தியுள்ளார் என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தந்தை வழியில் அரசியலுக்குள் பிரவேசித்த இந்த ராஜாங்க அமைச்சர், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவி உயர்வை எதிர்பார்த்து அல்லது வேறு ஒரு காரணத்திற்காக இந்த யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த யாகத்தில் பூசாரிகள், ராஜாங்க அமைச்சரின் தந்தை, உறவுச் சகோதரர்கள் சிலரும், குடும்பத்துடன் நெருக்கமான பெண்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.யாகத்தில் அதிகளவான பெண்களை கலந்துக்கொள்ள செய்வது யாகம் வெற்றி பெற உதவும் என பூசாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த யாகம் அதிகாலை 2.30 வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் மாலை 6 மணிக்கு பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால வனத்திற்குள் செல்ல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: